உள்ளூர் செய்திகள்

பாம்பு கடித்து விவசாயி பலி

Published On 2022-12-08 07:57 GMT   |   Update On 2022-12-08 07:57 GMT
  • பாம்பு கடித்து விவசாயி பலியானார்.
  • கார்த்திகை தீபத்தன்று விளக்கேற்றி வழிபடுவது வழக்கம்.

கள்ளக்குறிச்சி:

சின்னசேலம் அருகேயுள்ள தோட்டப்பாடி கிராமத்தில் வசிப்பவர் ராமர் (வயது 37). இவருக்கு செல்வி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்்ளனர். இவர் விவசாயம் செய்து வருகிறார். கார்த்திகை தீபத்தன்று விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். அதன்படி ராமர் தனது வீட்டில் விளக்கேற்றிவிட்டு, நிலத்தில் உள்ள பாசன கிணறு அருகே விளக்கேற்றிவிட்டு திரும்பினார். அப்போது அவரது காலில் பூச்சி கடித்தது போல உணர்ந்தார்.

உடனே அங்கு பார்க்கும் போது விஷப்பாம்பு அவரை கடித்துவிட்டு சரசரவென ஒடியது. இவர் கூச்சலிட்டதில் அக்கம் பக்கத்தினர் ஒடிவந்து ராமரை சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ராமரின் மனைவி செல்வி (வயது 34) அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் அருகேயுள்ள கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News