உள்ளூர் செய்திகள்

நிலத்தகராறில் கல்லால் தாக்கப்பட்ட விவசாயி சாவு

Published On 2023-09-30 15:42 IST   |   Update On 2023-09-30 15:42:00 IST
  • பரந்தாமனுக்கும், சம்பத்திற்கும் நிலம் தொடர்பாக பிரச்சினை உள்ளது.
  • பரந்தாமன் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டார்.

காவேரிப்பட்டணம்,  

கிருஷ்ணகிரி மாவட்டம் பனகமுட்லு அருகே உள்ள பில்லகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 60). விவசாயி. இவரது மகன் வினோத் (27). அதே பகுதியை சேர்ந்தவர் சம்பத் என்கிற சம்பத்குமார் (37). முன்னாள் ராணுவ வீரர். இவரது சகோதரர் சின்னசாமி (34). ரேஷன் கடை விற்பனையாளர். பரந்தாமனுக்கும், சம்பத்திற்கும் நிலம் தொடர்பாக பிரச்சினை உள்ளது. இதன் காரண மாக அவர்களுக்குள் முன்வி ரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி காலை 8.30 மணி அருகில் பில்லக்கொட்டாய் கிராம மக்கள் இரு தரப்பினரிடமும் சமரச பேச்சு வார்த்தை நடத்தி னார்கள். அந்த நேரம் அவர்களுக்குள் கை கலப்பு ஏற்பட்டது.

இதில் சம்பத்குமார் மற்றும் அவரது சகோதரர் சின்னசாமி ஆகியோர் சேர்ந்து பரந்தாமனை கல்லால் தாக்கினார்கள். இதில் அவருக்கு தலையில் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இது தொடர்பாக காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி ரமணன் விசார ணை நடத்தி, சம்பத், அவரது சகோதரர் சின்னசாமி ஆகிய 2 பேர் மீதும், ஆபாசமாக பேசுதல், தாக்குதல் கொலை மிரட்டல் விடுத்தல், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பத்தை கைது செய்தனர்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரந்தாமன் கடந்த 28-ந் தேதி சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக காவேரிப்பட்டணம் போலீசார் மாற்றி உள்ளனர். மேலும் சின்னசாமியை தேடி வருகிறார்கள்.

Similar News