உள்ளூர் செய்திகள்
- மோட்டார் சைக்கிள் திடீரென்று கட்டுபாட்டை இழந்து அந்த வழியாக வந்த டிராக்டர் மீது மோதியது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி கூரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபத்திரன் (வயது 65).
விவசாயியான இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் காவேரிப்பட்டணம் வரைசென்றார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் திடீரென்று கட்டுபாட்டை இழந்து அந்த வழியாக வந்த டிராக்டர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த வீரபத்திரனை உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.