உள்ளூர் செய்திகள்
திண்டுக்கல் அருகே கார் மோதி விவசாயி பலி
- திண்டுக்கல் - மதுரை 4 வழிச்சாலையில் பைக் மீது கார் மோதி விபத்து
- இதில் படுகாயமடைந்த விவசாயி உயிரிழந்தார்
திண்டுக்கல் :
திண்டுக்கல் அருகில் உள்ள ஜாதிக்கவுண்டன் பட்டியை சேர்ந்த விவசாயி ஜெய்கணேஷ் (வயது 42). இவர் தனது மகன் பாலா (13) உடன் மோட்டார் சைக்கிளில் மதுரை-திண்டுக்கல் 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
காமலாபுரம் பிரிவு அருகே சென்றபோது அவ்வழியே வந்த கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படு காயமடை ந்தனர். தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டு ஜெய்கணேஷ் உயிரிழந்தார். அவரது மகன் தொடர்ந்து சிகிக்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து சின்னாளபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.