உள்ளூர் செய்திகள்

விவசாயி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-07-05 15:35 IST   |   Update On 2023-07-05 15:35:00 IST
  • குடிப்பழக்கத்தால், அவரது உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தது.
  • அங்குள்ள ஒரு புளிய மரத்தில் அவர் தூக்கில் பிணமாக கிடந்தார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஜிட்டிகான்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது50). விவசாயி. இவருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருப்பதால் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார்.

இந்த நிலையில் குடிப்பழக்கத்தால், அவரது உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் எந்த பலனும் அளிக்காததால் மனவேதனையில் இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவிந்தன் தனது தோட்டத்தில் உள்ள கொட்டகையில் தூங்குவதாக கூறிவிட்டு சென்றார். காலை விடிந்து நீண்டநேரமாகியும் கோவிந்தன் வீட்டிற்கு வராததால், உறவினர்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது, அங்குள்ள ஒரு புளிய மரத்தில் அவர் தூக்கில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அவரது மகன் மயில்வாகனன் பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விசாரணை நடத்தினர்.

இதில் கோவிந்தன் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் போலீசார் கோவிந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News