உள்ளூர் செய்திகள்

பேரணியில் ஊர்வலமாக சென்ற கல்லூரி மாணவிகளை படத்தில் காணலாம்.

கண்தான விழிப்புணர்வு பேரணி

Published On 2023-09-05 15:40 IST   |   Update On 2023-09-05 15:40:00 IST
  • வாசன் கண் மருத்துவமனையும், தனியார் மகளிர் கல்லூரியும் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தியது.
  • கண் தானம் வழங்க வேண்டியதன் அவசியத்தை அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக வந்தனர்.

தருமபுரி, 

கண் தானம் செய்ய வேண்டியதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில் தருமபுரியில் உள்ள வாசன் கண் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 38 -ஆம் ஆண்டாக கண் தான விழிப்புணர்வு வாரத்தை நினைவு படுத்தும் வகையில் கண்தான வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தருமபுரியில் வாசன் கண் மருத்துவமனையும், தனியார் மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயில் அருகே இருந்து புறப்பட்ட இப்பேரணியை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு பேரணி யில் தருமபுரி வாசன் கண் மருத்துவமனையின் கண் மருத்துவர்கள் சரண்யா, வித்யா, ஹர்ஷினி, உள்ளிட்ட மருத்துவர்களும், மக்கள் தொடர்பு அலுவலர் வெங்கடேஷ் உள்ளிட்ட ஊழியர்களும், மாட்லாம் பட்டி தனியார் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவி களும் கண் தானம் வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் கலந்து கொண்டு ஊர்வலமாக வந்தனர்.

இப்பேரணியானது தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து தொடங்கி நேதாஜி பைபாஸ் சாலை நாச்சியப்ப கவுண்டர் தெரு, நகராட்சி பூங்கா வழியாக வாசன் கண் மருத்துவமனையை சென்றடைந்தது.

Tags:    

Similar News