உள்ளூர் செய்திகள்

போலீஸ் சூப்பிரண்டுடன் மருத்துவ குழு ஆலோசனை

Published On 2022-06-06 15:50 IST   |   Update On 2022-06-06 15:50:00 IST
  • விசாரணை குறித்து மருத்துவ குழு, மற்றும் போலீஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணை குறித்தும் இரண்டு தரப்பினரும் பகிர்ந்து கொண்டனர்.
  • சென்னை மருத்துவ குழுவினர் சேலம் மற்றும் ஓசூர் சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனைகளில் விசாரணை நடத்த கிளம்பி சென்றனர்.

ஈரோடு:

16 வயது சிறுமிக்கு கருமுட்டை எடுத்த விவகாரத்தில் உண்மை நிலையை கண்டறியும் வகையில் இரண்டு தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ குழு சென்று விசாரணையை தீவிரப்படுத்தியது.

இந்நிலையில் இந்த மருத்துவ குழு இன்று காலை ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், மற்றும் இந்த வழக்கை விசாரித்து வரும் ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி ஆகியோரை சந்தித்து ஆலோசித்தது.

அப்போது இதுவரை மேற்கொண்ட விசாரணை குறித்து மருத்துவ குழு, மற்றும் போலீஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணை குறித்தும் இரண்டு தரப்பினரும் பகிர்ந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து சென்னை மருத்துவ குழுவினர் சேலம் மற்றும் ஓசூர் சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனைகளில் விசாரணை நடத்த கிளம்பி சென்றனர்.

Tags:    

Similar News