உள்ளூர் செய்திகள்

வலது கரை வாய்க்காலை தூர்வாரிய பின் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்

Published On 2023-06-30 10:16 GMT   |   Update On 2023-06-30 10:16 GMT
  • மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு கடந்த 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது
  • வாய்க்காலின் பல இடங்களில் புதர் மண்டியுள்ள புல், பூண்டு, மரங்கள் என அனை த்தையும் அகற்றி தூர்வார வேண்டும்

அம்மாபேட்டை

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு கடந்த 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதைத்தொ டர்ந்து மேட்டூர் வலது மற்றும் இடது கரை வாய்க்காலில் வரும் ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். மேலும் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் வரத்துக்கு ஏற்ப வாய்க்காலில் தண்ணீர் திறப்பது சிறிது கால தாமதமும் ஆகலாம்.

கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யும் காலங்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் போது அந்தந்த காலகட்டங்களில் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு தண்ணீரை திறப்பதுண்டு. டெல்டா பாசனத்திற்கு அணையில் இருந்து 13 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் வெளியேறும் நிலையில் 120 அடி கொள்ளளவு உள்ள அணையின் நீர்மட்டம் 91 அடியாக உள்ளது.

வாய்க்காலில் தண்ணீர் திறக்க இன்னும் ஒரு மாத காலம் இருக்கும் நிலையில் அதற்கு முன்பு வாய்க்காலின் பல இடங்களில் புதர் மண்டியுள்ள புல், பூண்டு, மரங்கள் என அனை த்தையும் அகற்றி தூர்வார வேண்டும்.

அப்போது தான் பாசன த்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர் கடை மடை வரை தங்கு தடை யின்றி செல்லு ம். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதற்கா ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News