உள்ளூர் செய்திகள்

வெள்ளாடு, செம்மறி ஆடுகளுக்கு நோய் தடுப்பூசி முகாம்

Published On 2022-08-09 09:31 GMT   |   Update On 2022-08-09 09:31 GMT
  • கொளத்துப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் ஆடுகளுக்கான நோய் தடுப்பூசி முகாம் நடை பெற்றது.
  • முகாமில் மருத்துவ குழுவினர் வெள்ளாடு, செம்மறி ஆடு, விலையில்லா ஆடுகளுக்கு நோய் கொல்வி தடுப்பூசி போட்டனர்.

கொடுமுடி:

கொடுமுடி அருகே கொளத்துப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தேவம்பாளையம், கொம்ப னைப்புதூர் கிராமங்களில் ஆடுகளுக்கான நோய் தடுப்பூசி முகாம் நடை பெற்றது.

ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ண னுண்ணி உத்தரவின் பேரில் கால்நடை உதவி இயக்குனர் டாக்டர்.கோவிந்தராஜ் முன்னிலையில் இம்முகாம் நடைபெற்றது.

முகாமில் கொம்ப னைப்புதூர் கால்நடை உதவி மருத்துவமனை டாக்டர். சி.விஜயகுமார் தலைமையில் மருத்துவ குழுவினர் வெள்ளாடு, செம்மறி ஆடு, விலையில்லா ஆடுகளுக்கு நோய் கொல்வி தடுப்பூசி போட்டனர்.

இதில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பி.ஆர்.சிவக்குமார் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.

Tags:    

Similar News