உள்ளூர் செய்திகள்

புளியம்பட்டியில் பாதுகாப்பு இன்றி திறந்து கிடக்கும் கிணறு

Published On 2023-07-22 07:25 GMT   |   Update On 2023-07-22 07:25 GMT
  • புளியம்பட்டியில் பாதுகாப்பு இன்றி கிணறு திறந்து கிடக்கிறது
  • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

பு.புளியம்பட்டி,

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி தினசரி மார்க்கெட்டு, பஸ் நிலையம் செல்லும் ரோட்டில் நகராட்சி அலுவ லகம், கிராம நிர்வாக அலுவலகம், பஸ் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், தபால் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளது. மேலும் மாணவ, மாணவி கள் அரசு பள்ளிகளுக்கு செல்லும் முக்கிய சாலை யாக இருக்கிறது. இந்த சாலை பொது மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலை யாக உள்ளதால் இந்த ரோட்டில் எப்போது போக்கு வரத்து அதிகம் இருந்து கொண்டே இருக்கும். இந்த சாலையையொட்டி கிராம நிர்வாக அலுவலகம் அருகே ஒரு கிணறு உள்ளது. இந்த கிணறு பாதுகாப்பின்றி இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறினர்.

இந்த கிணறு சாலையின் தரை மட்டத்தில் இருந்து எட்டி பார்க்கும் அளவில் உயரம் குறைவாக உள்ளது. கிராம நிர்வாக அலுவ லகத்திற்கு வந்து, செல்ப வர்களும் மற்றும் பொது மக்கள் போக்கு வரத்து அதிகம் உள்ள இந்த சாலை என்பதால் இந்த கிணற்றால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க மற்றும் விபத்துகள் நடக்காமல் இருக்க பாது காப்பு இன்றி திறந்து கிடக்கும் இந்த கிணற்றை இரும்பு கேட்டுகள் அமைத்து மூட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News