உள்ளூர் செய்திகள்
- ஆலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகாமணி கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ்.நகர் பகுதியில் மயங்கி கிடந்தார்.
- அக்கம்பக்கத்தினர் மகாமணியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஈரோடு:
நாமக்கல் மாவட்டம் காவேரி ஆர்.எஸ்.ஆலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகாமணி (70). இவர் கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ்.நகர் பகுதியில் மயங்கி கிடந்தார்.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் மகாமணியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு மகாமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.