உள்ளூர் செய்திகள்

புது மாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-01-13 09:45 GMT   |   Update On 2023-01-13 09:45 GMT
  • ரவிக்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
  • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (38). கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் ஆனது.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பணி முடிந்து ரவிக்குமார் வீட்டுக்கு வந்தார். அப்போது ரவிக்குமார் மது அருந்தி உள்ளார். ஊரில் உள்ளவர்களுக்கு போன் செய்து கொண்டு அப்படியே தூங்க அங்குள்ள அறைக்கு சென்று விட்டார்.

இதனையடுத்து ரவிக்குமார் உறவினர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது அறையில் செல்போன் உடைந்து கிடந்து உள்ளது.

மேலும் ரவிக்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரது உடலை கீழே இறக்கி வைத்தனர்.

இதுகுறித்து சென்னிமலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ரவிக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவிக்குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் தெரியவில்லை.

புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News