- ஆசிரியர்கள் திறம்பட செயல்படுத்துதல் நோக்கத்துடன் இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி சென்னிமலை கொங்கு மெட்ரிக் பள்ளியில் நடந்தது.
- இதில் 68 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலிருந்து 173 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
சென்னிமலை:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி துறை சார்பாக சென்னிமலை யூனியன், அம்மாபாளையம், பசுவப்பட்டி, வெள்ளோடு, ஈங்கூர், மற்றும் திப்பம்பாளையம் ஆகிய குறுவள மையங்களில் தொடக்க பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் நடுநிலை பள்ளிகளில் உள்ள 1 முதல் 5 வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்கள் திறம்பட செயல்படுத்துதல் நோக்கத்துடன் இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி சென்னிமலை கொங்கு மெட்ரிக் பள்ளியில் நடந்தது.
இப்பயிற்சியில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களில் ஆசிரியர்கள் வகுப்பறை கையாளுதல் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் கற்றல் உபகரணங்கள் செய்யும் முறை குறித்து ஆசிரியப்பயிற்றுநர் மற்றும் ஆசிரியக் கருத்தாளர்கள் விளக்கினார்கள்.
வட்டார கல்வி அலுவலர்கள் ராஜேந்திரன், செல்வி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் கோபிநாதன் ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
இதில் 68 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலிருந்து 173 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் நிர்மல்குமார், அம்பிகா, மைதிலி, குமுதா, கஸ்தூரி ஆகியோர் பங்கேற்றனர்.