உள்ளூர் செய்திகள்

மது விற்பனை செய்த முதியவர் கைது

Published On 2022-10-30 09:49 GMT   |   Update On 2022-10-30 09:49 GMT
  • அவல்பூந்துறை-வெள்ளோடு ரோட்டில் முதியவர் மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்தார்.
  • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மொடக்குறிச்சி:

ஈேராடு மாவட்டம் சிவகிரி பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது அவல்பூந்துறை-வெள்ளோடு ரோட்டில்  முதியவர் மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்தார்.

அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் அவல்பூந்துறை தெற்கு தெரு பகுதியை சேர்ந்த திருஞான சம்பத் (52) எனவும் அவர் அனுமதியின்றி மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News