உள்ளூர் செய்திகள்

சிறுவர்- பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கும் பணி தீவிரம்

Published On 2022-07-12 09:35 GMT   |   Update On 2022-07-12 09:35 GMT
  • கிராமத்தில் ரூ.1.20 லட்சம் செலவில் 6,800 சதுர அடி பரப்பளவில் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.
  • மேலும் பட்டாம்பூச்சி பூங்காவிற்கு அருகிலேயே ரூ.4.68 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குள்ளம்பாளையம் கிராமத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமம் ஏற்கனவே திறந்த வெளி மலம் கழித்தல் இல்லாத கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப்போல் இந்த கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தனித்தனியாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு குடிநீர் தேவையில் தன்னிறைவு பெற்ற கிராமமாக விளங்கி வருகிறது.

இந்த கிராமத்தில் ரூ.1.20 லட்சம் செலவில் 6,800 சதுர அடி பரப்பளவில் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.

மேலும் பட்டாம்பூச்சி பூங்காவை சுற்றிலும் 147 மீட்டர் தொலைவிற்கு கம்பி வேலி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பட்டாம்பூச்சிகளை ஈர்க்கும் வகையில் 300-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான செடிகள் பூங்காவில் நடப்பட உள்ளது.

மேலும் பட்டாம்பூச்சி பூங்காவிற்கு அருகிலேயே ரூ.4.68 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த 2 பூங்காக்களின் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பணி கள் விரைவில் முடிக்க ப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் தெரி வித்தனர்.

Tags:    

Similar News