உள்ளூர் செய்திகள்

அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபடுவேன்

Published On 2023-05-22 07:47 GMT   |   Update On 2023-05-22 07:47 GMT
  • தந்தை பெரியார் பிறந்த மண்ணில் ஈரோடு மாவட்ட கலெக்டராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.
  • அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் முழுமையாக முயற்சி செய்வேன்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் புதிய கலெக்டராக ராஜ கோபால் சுங்கரா நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து அவர் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முறைப்படி கலெக்டர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு மாவட்ட கலெக்டராக பணியாற்ற வாய்ப்பளித்த முதல்-அமைச்சருக்கும், அமைச்சர் முத்தசாமிக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தந்தை பெரியார் பிறந்த மண்ணில் ஈரோடு மாவட்ட கலெக்டராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.

பொதுமக்கள் குறைகளை தீர்க்கவும், அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் முழுமையாக முயற்சி செய்வேன். தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடையும் வகையில் செயல்படுவேன்.

இம்மாவட்டத்தின் முக்கிய தொழில்களான விவசாயம், நெசவு, தொழிற்சாலை வளர்ச்சிக்காக முழு அள வில் பாடுபடுவேன். பொது மக்கள் தங்களது குறைகளை எண் நேரமும் தெரி விக்கலாம். இதற்காக 0424-2260211 என்ற தொலைபேசி எண்ணும், 97917 88852 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News