உள்ளூர் செய்திகள்

மனைவியை கொலை செய்த கணவர் 5 ஆண்டுகளுக்கு பின்னர் கைது

Published On 2023-05-18 09:28 GMT   |   Update On 2023-05-18 09:28 GMT
  • ரோஹீம் காஜீ மனைவி கோபினாவை கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
  • கொலை செய்த கணவனை போலீ சார் கைது செய்து வந்தது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புது மேட்டூர் சின்னச்சாமி செங்கல் சூளையில் கொல்கத்தா, பெலிசிடா மாவட்டம், நெலிபாரியை சேர்ந்த ரோஹீம் காஜீ (43) மற்றும் இவரது மனைவி கோபினா (24) ஆகியோர் அந்தியூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்தார்கள்.

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் ரோஹீம் காஜீ மனைவி கோபினாவை கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இந்நிலையில் இவரை வட மாநில பகுதியில் பல்வேறு இடங்களில் போலீசார் தேடி வந்தனர். மேலும் தமிழ்நாட்டிற்கு மீண்டும் செங்கல் சூளை பகுதியில் வேலை செய்ய வந்துள்ளாரா? என்றும் போலீசார் அவ்வப்போது தேடி வந்தனர்.

இந்த நிலையில் அந்தியூர் அருகே உள்ள செங்கல் சூளையில் ரோஹீம் காஜீ வேலைக்கு சேர்ந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை யடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்தி ற்கு சென்று ரோஹீம் காஜியை கைது செய்து அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

5 ஆண்டுகளுக்கு பிறகு மனைவியை கொலை செய்த கணவனை போலீ சார் கைது செய்து வந்தது அந்தியூர் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News