பூதப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்
- முதல் வாரம் தோறும் புதன்கிழமை முதல் ஏலம் நடக்க இருக்கிறது.
- வெளி மாவட்ட நூற்பாலை வியாபாரிகள் வருகை தர உள்ளனர்.
அம்மாபேட்டை,
அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி மற்றும் மாவட்டத்தின் பல்ேவறு பகுதியில் இருந்து விவசாயிகள் தங்கள் பகுதியில் விளையும் பருத்தியை விற்பனைக்கு பூதப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வருவார்கள்.
இங்கு இந்த வருடத்திற்கான பருத்தி ஏலம் வருகிற 14-ந் தேதி முதல் வாரம் தோறும் புதன்கிழமை முதல் ஏலம் நடக்க இருக்கிறது. மறைமுக ஏலம் நடைபெறும் என்றும், ஏலம் முடிந்தவுடன் விவசாயிகளின் தொகை நேரடியாக விவசாயிகள் கணக்கில் வரவு வைப்பதால் வங்கி பாஸ் புக் மற்றும் ஆதார் அட்டை, பாஸ்போ ர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றின் நகல்களை கொண்டு வர வேண்டும்.
மேலும் இந்த ஏலத்தில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட நூற்பாலை வியாபாரிகள் வருகை தர உள்ளனர். எனவே விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளையும் பருத்தியினை நன்கு உலரவைத்து தூசி களை நீக்கி தரமான பஞ்சு களை கொண்டு வர வே ண்டும்.
இந்த வருடம் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் பருத்தி பயிர் செய்திருப்பதால் விற்பனைக்கு வரும் பருத்தியின் அளவு அதிகரிக்கும்.
அதனால் விவசாயிகள் தங்கள் பருத்திகளை விற்று பயனடையுமாறு பூதப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூட கண்கானிப்பாளர் சந்திரசேகரன் தெரிவித்து ள்ளார்.