உள்ளூர் செய்திகள்

வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நிறைவு

Published On 2022-07-05 09:38 GMT   |   Update On 2022-07-05 09:38 GMT
  • வனவிலங்குகள் குறித்து ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் என இரு முறை வனவிலக்கு கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவது வழக்கம்.
  • வனவிலங்கு கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் சென்னை தலைமை வன பாதுகாப்பு அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், டி. என். பாளையம், கடம்பூர், தலமலை, விளாமுண்டி, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீரகள்ளி ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன.

இதில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

வனவிலங்குகள் குறித்து ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் என இரு முறை வனவிலக்கு கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவது வழக்கம்.

அதன்படி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மழை காலத்திற்கு முந்திய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி கடந்த ஜூன் 27-ந் தேதி தொடங்கியது.

10 வனச்சரகங்களில் பணிபுரியும் 300-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் 76 குழுக்களாக பிரிந்து வனவிலங்கு கணக்கெடுப்பு பணி மேற்கொண்டனர்.

இதில் வன விலங்குகளில் எச்சம், கால்தடம் உள்ளிட்டவைகளை அடிப்படையாகக் கொண்டு ஜி.பி.எஸ். கருவி, காம்பஸ், வியூ பைன்டர், ரேஞ்ச் பைன்டர் உள்ளிட்ட பல்வேறு கருவிகளை பயன்படுத்தி கணக்கெடுப்பு பணி நடந்து வந்தது.

மொத்தம் 6 நாட்கள் நடந்த கணப்பு எடுப்பு பணி நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து வனவிலங்கு கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் சென்னை தலைமை வன பாதுகாப்பு அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News