உள்ளூர் செய்திகள்

சாக்கடையில் நிர்வாண நிலையில் பெண் உடல் மீட்பு

Published On 2023-04-12 13:36 IST   |   Update On 2023-04-12 13:36:00 IST
  • சாக்கடை கால்வாயில் பெண் உடல் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
  • இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

ஈரோடு:

சத்தியமங்கலம் போக்குவரத்து போலீஸ் நிலையம் முன்பாக உள்ள சாக்கடை கால்வாயில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் உடல் நிர்வாண நிலையில் கிடப்பதாக சத்தியமங்கலம் டவுன் கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகருக்கு தகவல் கிடைத்தது.

இது குறித்து சத்தியமங்கலம் போலீசில் கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் புகார் செய்தார். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 8 அடி ஆழ சாக்கடையில் அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

நிர்வாண நிலையில் உடல் கிடந்ததாலும், அருகிலேயே பச்சை கலரில் சேலை கிடந்துள்ளதாலும் அவர் பலாத்காரம் செய்யப்பட்டாரா? அல்லது தவறி சாக்கடையில் விழுந்தாரா? என்பது குறித்தும் சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News