உள்ளூர் செய்திகள்

அந்தியூர் குருநாதசாமி கோவில் தேர்த்திருவிழா, குதிரை சந்தை 3-வது ஆண்டாக ரத்து

Published On 2022-07-23 10:00 GMT   |   Update On 2022-07-23 10:00 GMT
  • கொரோனோ பரவல் காரணமாக தொடர்ந்து 3-வது ஆண்டாக குருநாதசாமி கோவில் பண்டிகை ரத்து செய்யப்பட்டதால், பக்தர்களும், பொது மக்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
  • திருவிழா ரத்து செய்யப்பட்டதன் காரணமாக தென்னிந்தியாவின் புகழ்பெற்ற குதிரை சந்தையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் புகழ்பெற்ற குருநாதசாமி கோவில் அமைந்துள்ளது.இ க்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் தேர் திருவிழா மற்றும் அதையொட்டி நடைபெறுகின்ற குதிரை சந்தை, பாரம்பரிய கால்நடை சந்தை தென்னிந்திய அளவில் பிரபலமானது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோவில் பண்டிகை ரத்து செய்யப்பட்டது.த ற்போது கொரோனா பரவல் தமிழகத்தில் சற்று அதி கரித்து வரும் நிலையில், திருவிழாவின் போது தமி ழகம் மட்டும் இன்றி அண்டை மாநி லங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால் இந்த ஆண்டு திருவிழா நடைபெறுமா என்று பொதுமக்கள் எதி ர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த ஆண்டும் திருவிழாவை ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டது.மேலும் சிறப்பு பூஜைகள் மட்டும் மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருவிழா ரத்து செய்யப்பட்டதன் காரணமாக தென்னிந்தியாவின் புகழ்பெற்ற குதிரை சந்தையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.கொரோனோ பரவல் காரணமாக தொடர்ந்து 3-வது ஆண்டாக குருநாதசாமி கோவில் பண்டிகை ரத்து செய்யப்பட்டதால், பக்தர்களும், பொது மக்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News