உள்ளூர் செய்திகள்

போலி லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

Published On 2023-01-07 11:07 GMT   |   Update On 2023-01-07 11:07 GMT
  • தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது
  • 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 30 போலி லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கோபி கலிங்கியம் தேர் வீதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இதன்பேரில், கோபி போலீசார் அங்கு சென்று வெளி மாநில லாட்டரி சீட்டுக்களை போலியாக அச்சிட்டு விற்பனை செய்து வந்த, கோபி கலிங்கியம் தேர் வீதியை சேர்ந்த சிவக்குமார்(42), கரட்டடிபாளையம் மாரிசாமி(52), வேட்டைக்காரன் கோவில் செல்வம்(60) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 30 போலி லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News