உள்ளூர் செய்திகள்

பவானிசாகர் அணையில் இருந்து 1,055 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

Published On 2023-05-18 09:50 GMT   |   Update On 2023-05-18 09:50 GMT
  • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.28 அடியாக உள்ளது.
  • அணையில் இருந்து 1,055 கன அடி தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது.

ஈரோடு:

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதி யாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாத தால் அணைக்கு நீர் வரத்து குறைய தொடங்கியது.

அதேநேரம் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது. இந்நிலை யில் கடந்த 2 நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.28 அடியாக உள்ளது. நேற்று அணைக்கு வினாடிக்கு 1,062 கன அடியாக அதிகரித்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 900 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 1,055 கன அடி தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது.

இதேப்போல் குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 34.37 அடியாக உள்ளது.

பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 24.08 அடியாக உள்ளது. வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 26.74 அடியாக உள்ளது.

Tags:    

Similar News