உள்ளூர் செய்திகள்
தாழம்பூர் அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் கோஷ்டி மோதல்
- நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் மாணவர்கள் புறப்பட்டு சென்றனர்.
- மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை மடக்கி பிடித்தனர்.
திருப்போரூர்:
தாழம்பூர், ஓ.எம்.ஆர். சாலையில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் மாணவர்கள் புறப்பட்டு சென்றனர். அப்போது தாழம்பூர் அருகே இருதரப்பு மாணவர்களிடையே திடீரென கோஷ்டி மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் தாழம்பூர் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை மடக்கி
பிடித்தனர். பின்னர் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதுபோன்று மீண்டும் மோதலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தினர்.