உள்ளூர் செய்திகள்

அரசு இடத்தில் தனி நபர் ஆக்கிரமிப்பு: மின் ஊழியர்கள், பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

Published On 2023-07-22 17:43 IST   |   Update On 2023-07-22 17:43:00 IST
  • நெடுஞ்சாலை துறை அதிகாரி பாலச்சந்தர் பார்வையிட்டு ஆக்கிரமிப்பை அகற்றும்படி கூறினார்.
  • அகற்றாவிட்டால் நெடுஞ்சாலைத்துறை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்படும் என எச்சரிக்கப்பட்டது.

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த வேண்பாக்கம், பொன்னேரி-திருவொற்றியூர் சாலை மாதா சிலை அருகில் தனிநபர், துணைமின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டிட வேலைகள் நடைபெற்றது. அப்போது, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மின் செயற்பொறியாளர் அலுவலக ஊழியர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த பொன்னேரி போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரி பாலச்சந்தர் பார்வையிட்டு ஆக்கிரமிப்பை அகற்றும்படி சம்பந்தப்பட்ட நபரிடம் கூறினர். இது நெடுஞ்சாலைத்துறை, மற்றும் மின்சார அலுவலகத்திற்கு சொந்தமான இடம் எனவும், ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் நெடுஞ்சாலைத்துறை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். இதனையடுத்து முற்றுகையிட்ட மக்கள், மின் ஊழியர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News