உள்ளூர் செய்திகள்

மின் சிக்கன வார விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

மின் சிக்கன வார விழா

Published On 2022-12-20 09:19 GMT   |   Update On 2022-12-20 09:19 GMT
  • நேரு நர்சிங் கல்லூரியில் மின் சிக்கன வார விழா கொண்டாடப்பட்டது.
  • மாணவிகளுக்கு மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வள்ளியூர்:

வள்ளியூர் மின்வாரிய கோட்டத்தின் சார்பாக மின் சிக்கன வார விழா நேரு நர்சிங் கல்லூரியில் கொண்டாடப் பட்டது. மின்வாரிய செயற்பொறியாளர் வளன் அரசு தலைமை தாங்கினார். கல்லூரி தாளாளர் டி.டி.என் லாரன்ஸ் மற்றும் கல்லூரி முதல்வர் மார்கரெட் ரஞ்சிதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும் மின் சிக்கனம் குறித்து போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் உதவி செயற்பொறியாளர்கள் ஆனந்த குமார், செல்வ கார்த்திக், பத்மகுமார், உதவி மின் பொறியாளர்கள், மின் வாரிய பணியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News