உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க பேரவை மே தின விழா பொதுக்கூட்டம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Published On 2023-04-19 08:23 GMT   |   Update On 2023-04-19 08:23 GMT
  • உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகள் உலகெங்கும் பாதுகாக்கப்பட வேண்டும்.
  • புதுச்சேரி மாநிலத்தில் வருகிற மே மாதம் 1-ந்தேதி மே தின விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

மே தின கொண்டாட்டங்கள் மூலம் தொழிலாளர்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவதோடு நின்றுவிடாமல், உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகள் உலகெங்கும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் வரலாற்று சிறப்பு மிக்க மே தினத்தைக் கொண்டாடும் வகையில் கழக அண்ணா தொழிற்சங்க பேரவையின் சார்பில் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்ட தலைநகரங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் வருகிற மே மாதம் 1-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று மே தின விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News