உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரம் ரேடிசன்புளு டெம்பிள்பே ஹோட்டலில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா.

கிழக்கு கடற்கரை சாலையில் ஆங்கில புத்தாண்டு கேளிக்கை விழாவிற்கு தயாராகும் ஹோட்டல்கள்

Published On 2022-12-21 16:54 GMT   |   Update On 2022-12-21 16:54 GMT
  • புத்தாண்டு கொண்டாட்டத்தின் முதற்கட்ட விழாவாக கிறிஸ்துமஸ் மரம் விளக்கு விழா தொடங்கியது
  • 2021-2022 ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தடைவிதித்திருந்தன

மாமல்லபுரம்:

சென்னை-மாமல்லபுரம் இடையிலான கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் 2023 ஆங்கில புத்தாண்டை உற்சாகமாக கொண்டாட முன்பதிவு துவங்கியது. இதற்கான முதற்கட்ட விழாவாக கிறிஸ்துமஸ் மரம் விளக்கு விழாவை, மாமல்லபுரம் கோவளம் சாலையில் உள்ள, "ரேடிசன்புளு டெம்பிள்பே" ஹோட்டலில் அதன் மேலாளர்கள் ஷபின் சர்வேத்தம், அமித்ராஜ் குண்டு உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த 2021-2022 ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தடைவிதித்தது. தற்போது கட்டுப்பாடு இல்லாததால், 2023ம் ஆண்டுக்கான புத்தாண்டு வர இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் கேளிக்கை விழாக்களை நடத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அனைத்து வகை ஹோட்டல்களும் முன்பதிவை துவங்கி உள்ளன.

Tags:    

Similar News