உள்ளூர் செய்திகள்

சின்னசேலத்தில் அதிகாலை முதல் மிதமான மழை

Published On 2022-08-19 09:14 GMT   |   Update On 2022-08-19 09:14 GMT
  • காலை 5 மணி முதல் சின்ன சேலம் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
  • இன்று காலை மழை குறுக்கிட்டதால் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி:

 சின்னசேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருவநிலை மாற்றம் காரணமாக மழை பொழிந்து கொண்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இன்று காலை 5 மணி முதல் சின்ன சேலம் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது பிறகு காலை 6 மணி முதல் சின்னசேலத்தில் விட்டு விட்டு மிதமான மழை பொழிந்தது இன்று கிருஷ்ண ஜெயந்தி என்பதால் அரசு விடுமுறை அளித்துள்ளது. இதனால் காலையிலே கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்று பக்தர்கள் எண்ணிக் கொண்டிருந்த நிலையில் இன்று காலை மழை குறுக்கிட்டதால் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பிறகு காலை 10 மணிக்கு மழை நின்றதால் பக்தர்கள் கோவிலுக்கு சென்று கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு செய்து வந்தனர்.

Tags:    

Similar News