உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் இ-வாகன விழிப்புணர்வு பிரசார ஊர்வலம்

Published On 2023-06-06 09:11 GMT   |   Update On 2023-06-06 09:11 GMT
  • இ-வாகன விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் நடந்தது.
  • முடிவில் தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி எடுக்கபட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மற்றும் போச்சம்பள்ளி கோட்டத்தின் மின் பகிர்மான அலுவலங்கள் சார்பில், கிருஷ்ணகிரியில் இ-வாகன விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் நடந்தது. கிருஷ்ணகிரி மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாய மேரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மின்வாரிய உதவி செயற் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இ-வாகனத்தின் முக்கியத்துவம் குறித்தும், இ வாகனத்தின் பயன்பாட்டால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கி பேசினார்கள். முடிவில் தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி எடுக்கபட்டது.

இதில் செயற்பொறியாளர் வேல், கிருஷ்ணகிரி கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் பவுன்ராஜ், போச்சம்பள்ளி கோட்ட செயற்பொறியாளர் இந்திரா மற்றும் மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News