தருமபுரி தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்போது இறந்த சிசுவை கண்ணில் காட்டாமல் கறாராக கட்டணம் வசூலிப்பு? -உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு
- குழந்தையை 8 நாட்களாக தாயிடம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. .தவறான சிகிச்சை காரணமாகவே குழந்தை இறந்துள்ளது என்று புகார் கூறினர்.குழந்தையை 8 நாட்களாக தாயிடம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
- தவறான சிகிச்சை காரணமாகவே குழந்தை இறந்துள்ளது என்று புகார் கூறினர்.
தருமபுரி,
தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எதிரில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. இங்கு பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது.
குறை பிரசவத்தில் பிறந்த அந்த குழந்தையை 8 நாட்களாக தாயிடம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் அந்த சிசு இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதற்கிடையே மருத்துவ கட்டணமாக ரூ.5 லட்சத்தை கறாராக வசூலித்து விட்டனராம். இந்நிலையில் அந்த பெண்ணின் உறவினர்கள் நேற்று இரவு அந்த மருத்துவமனை முன்பு திரண்டனர்.தவறான சிகிச்சை காரணமாகவே குழந்தை இறந்துள்ளது என்று அவர்கள் புகார் கூறினர்.
ஆனால் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் வேண்டுமானால் பிரேதபரிசோதனை செய்துகொள்ளலாம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த தருமபுரி நகர போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தி குழந்தையின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.