உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 12 கால்நடைகள் இறப்பு: 8 குடிசை வீடுகள் சேதம்

Published On 2022-11-08 07:14 GMT   |   Update On 2022-11-08 07:14 GMT
  • 12 கால்நடைகள் இறந்த நிலையில், 8 குடிசை வீடுகள் இடிந்து சேதம் அடைந்து உள்ளன.
  • பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கடலூர்:

வடகிழக்கு பருவ மழை தொடங்கியதை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் கன மழை பெய்து வந்தது. நேற்று கடலூர் மாவ ட்டத்தில் அண்ணாமலை நகர், சிதம்பரம், பரங்கி ப்பேட்டை, வடக்குத்து, கொத்வாச்சேரி, புவனகிரி காட்டுமன்னார்கோவில் லால்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கன மழை பெய்த காரணத்தினால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விளை நிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் தொடர் மழை காரணமாக 12 கால்நடைகள் இறந்த நிலையில், 8 குடிசை வீடுகள் இடிந்து சேதம் அடைந்து உள்ளன.

இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் ஏரிகள் நிரம்பி வந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரையும், வீடுகள் பகுதிகளில் சொந்த மழை நீரையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியேற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்வருமாறு-அண்ணாமலைநகர் - 32.0, சிதம்பரம் - 28.8, பரங்கிப்பேட்டை - 28.0, மீ-மாத்தூர் - 2.0, வடகுத்து - 1.0, கொத்தவாச்சேரி - 1.0, புவனகிரி - 1.0, காட்டுமன்னார்கோயில் - 1.0, லால்பேட்டை - 1.0, மொத்தம் - 95.80 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News