உள்ளூர் செய்திகள்

குடிபோதையில் விபரீதம்: கடப்பாரையால் தந்தையை அடித்துக்கொன்ற மகன் கைது

Published On 2023-03-10 04:53 GMT   |   Update On 2023-03-10 04:53 GMT
  • அரவிந்தன் 10-ம் வகுப்பு படித்துவிட்டு மேற்படிப்பு படிக்காமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார்.
  • மன்னார்குடி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து அரவிந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த வாஞ்சியூரை சேர்ந்தவர் மோகன் (வயது 55) விவசாயி. இவரது மனைவி கமலா. இவர்களுக்கு அரவிந்தன் (19), அர்ஜூன் (15) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

அரவிந்தன் 10-ம் வகுப்பு படித்துவிட்டு மேற்படிப்பு படிக்காமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு அரவிந்தன் மதுபானம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது மோகனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு நடந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மகன் அரவிந்தன் குடிபோதையில் வீட்டில் இருந்த கடப்பாரையால் தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் மோகன் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். உடனடியாக, அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மோகனை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக மன்னார்குடி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து அரவிந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் மகனே தந்தையை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News