உள்ளூர் செய்திகள்
ஓசூர் அருகே ஏரியில் மூழ்கி மனநிலை பாதித்தவர் பலி
- சின்னமுனுசாமியை கடந்த 16-ந்தேதி முதல் காணவில்லை.
- அதே பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் அவர் பிணமாகி மிதந்தார்.
கிருஷ்ணகிரி,
ஓசூர் அருகேயுள்ள பலகானப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் (சின்னமுனுசாமி வயது 72).
இவருக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சின்னமுனுசாமியை கடந்த 16-ந்தேதி முதல் காணவில்லை. அவரை பல்வேறு இடங்களிலும் தேடி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் அவர் பிணமாகி மிதந்தார்.
ஏரியில் அவர் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து பாகலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.