உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திரவுபதி கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-06-25 09:48 GMT   |   Update On 2022-06-25 09:48 GMT
  • தொடர்ந்து வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், ரக்சாபந்தனத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
  • அதனைத் தொடர்ந்து புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த தேவூரில் உள்ள திரவுபதி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜையுடன், கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை, பூர்வாங்க பூஜைகளுடன் பூர்ணாஹுதி தீபாரதனை நடைப்பெற்றது.

தொடர்ந்து வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், ரக்சாபந்தனத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. சிறப்பு தீபாராதனைக்கு பின்னர், ராஜகோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News