உள்ளூர் செய்திகள்

ரத்தம் கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளுங்கள் - பல்லடம் நீதிபதி அறிவுறுத்தல்

Published On 2023-02-10 11:18 GMT   |   Update On 2023-02-10 11:18 GMT
  • குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சித்ரா மற்றும் நீதிபதிகள் பங்கேற்றனர்.
  • அனைவரும் புரிந்துகொண்டு ரத்தம் கொடுக்க முன்வர வேண்டும் என்றார்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நீதிமன்றத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் சார்பு நீதிபதி சந்தானகிருஷ்ணன் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சித்ரா மற்றும் நீதிபதிகள் பங்கேற்றனர்.

இதில் சார்பு நீதிபதி சந்தானகிருஷ்ணன் ரத்த தானம் செய்தார். முன்னதாக பேசிய அவர், அனைவரும் ரத்தம் கொடுத்தால் உடலுக்கு இடையூறு ஏற்படும் என்று எண்ணுவதை விட்டுவிட்டு ரத்தம் கொடுப்பது மீண்டும் மீண்டும் உடலில் ரத்தம் உருவாகி புத்துணர்ச்சியை ஏற்படுத்தி ஆரோக்கியமாக வைக்க உதவும். இதனை அனைவரும் புரிந்துகொண்டு ரத்தம் கொடுக்க முன்வர வேண்டும் என்றார். 

Tags:    

Similar News