உள்ளூர் செய்திகள்

பதிவுச்சான்று பெறாத விதைக் குவியல்களை விற்பனை செய்ய கூடாது

Published On 2023-04-20 09:54 GMT   |   Update On 2023-04-20 09:54 GMT
  • கோடை காலத்திற்கு ஏற்ற பயிர் மற்றும் ரகங்களை மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
  • காலாவதி நாள் மற்றும் விலை விவரம் அடங்கிய ரசீது விவசாயிகளின் கையொப்பம் பெற்று கட்டாயம் வழங்க வேண்டும்.

கிருஷ்ணகிரி,

பதிவுச்சான்று பெறாத விதைக்குவியல்களை விற்பனை செய்யக்கூடாது என தர்மபுரி மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில், விதை விற்பனை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்கள் மற்றும் நாற்றுப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த 2 மாவட்டங்களிலும் காய்கறி பயிர்கள் அதிகமாக பயிரிடப்பட்டு வருகின்றன.

இதனால் தற்போது காய்கறி பயிர்கள் பயிரிடும் விவசாயிகள் கோடை காலத்திற்கு ஏற்ற பயிர் மற்றும் ரகங்களை தங்கள் பகுதி தோட்டக்கலை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்களின் ஆலோசனைப்படி பயிர் செய்து அதிக மகசூல் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விதை விற்பனை யாளர்கள் மற்றும் நாற்றுப் பண்ணை உரிமையாளர்கள் கோடை காலத்திற்கு ஏற்ற பயிர் மற்றும் ரகங்களை மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய அறிவுறுத்தப்படுகிறது. மேலும் அனைத்து விதை விற்பனையாளர்களும் மற்றும் நாற்றுப் பண்ணை உரிமையாளர்களும் விவசாயிகளுக்கு உரிய பயிர் ரகம், குவியல் எண், காலாவதி நாள் மற்றும் விலை விவரம் அடங்கிய ரசீது விவசாயிகளின் கையொப்பம் பெற்று கட்டாயம் வழங்க வேண்டும்.

அரசு சான்று பெறாத அல்லது விதைச்சான்றளிப்புத்துறை மற்றும் அங்ககச்சான்றளிப்புத் துறையினால் வழங்கப்படும் பதிவுச்சான்று பெறாத விதைக்குவியல்களை விற்பனை செய்யக்கூடாது. இதனை மீறுவோர் மீது தக்க நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News