உள்ளூர் செய்திகள்

கடலூர் மஞ்சக்குப்பம் புனித வள்ளலார் பள்ளியில் தேர்வு எழுதுபவர்களை படத்தில் காணலாம்.

கடலூர் மாவட்டத்தில் 10 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு

Published On 2022-07-24 09:43 GMT   |   Update On 2022-07-24 09:43 GMT
  • கடலூர் மாவட்டத்தில் 10 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடந்தது.
  • கடலூர் மாவட்டத்தில் கடலூர், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட 10 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

கடலூர்:

தமிழக அரசு துறை–களில் கிராம நிர்வாக அலுவலர் இளநிலை உதவி–யாளர் உள்பட பல்வேறு பதவிகளில் 7,301 பணி–யிடங்களை நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி. சார்பில் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி அறிவிப்பு வெளியி–டப்பட்டது. இதையொட்டி இந்த பணிக்காக தமிழகம் முழு–வதும் தேர்வு எழுத 22 லட்சத்து 2,942 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த தேர்வு இன்று (24-ந் தேதி) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக தமிழகம் முழு–வதும் 316 தாலுகாகளில் 7,689 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

கடலூர் மாவட்டத்தில் இந்த தேர்வினை 99,437 பேர் எழுத விண்ணப்பித்தி–ருந்தனர். இதற்காக கடலூர் மாவட்டத்தில் கடலூர், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட 10 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வு இன்று காலை தொடங்கியது. தேர்வினை கண்காணிக்க 54 நடமாடும் குழு அமைக்கப்பட்டிருந்தது. 331 பறக்கும் படையினர் தீவிரமாக தேர்வினை கண்காணித்தனர். அதோடு 333 தேர்வு அறைகளுக்கு 342 வீடியோ கிராபர்கள் இந்த தேர்வினை பதிவு செய்தனர். இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கியது. தேர்வு மையத்தில் பலத்த சோத–னைக்கு பின்னறே தேர்வு எழுதுவோர் அனு–மதிக்கப்பட்டனர். மஞ்சக்குப்பம் புனித வளனார் பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்துக்கு ஒருவர் கால–தாமதமாக வந்தார். அவரை தேர்வு அலுவலர்கள் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. ஆத்திரம் அடைந்த அவர் ஹால் டிக்கெட்டை கிழித்து எறிந்தார். இதேபோன்று பலர் தாம–தமாக வந்தனர். அவர்களை அதிகாரிகளை–யும் தேர்வு எழுத அனுமதிக்க வில்லை. அனுமதிக்கவில்லை.

Tags:    

Similar News