உள்ளூர் செய்திகள்

யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமையில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.

சிவகிரி அருகே தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

Published On 2023-05-28 08:29 GMT   |   Update On 2023-05-28 08:29 GMT
  • புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தார்.
  • முகாமில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

சிவகிரி:

தென்காசி வடக்கு மாவட்டம், வாசுதேவ நல்லூர் வடக்கு ஒன்றியம், ராமநாதபுரத்தில் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், யூனியன் சேர்மனுமான பொன் முத்தையா பாண்டியன், ராம நாதபுரம் கிளைச்செய லாளர் மகேந்திரன் ஆகியோர் தலைமையில், மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் மனோகரன் முன்னிலையில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

இதில் அவைத்தலைவர் திருமலைச்சாமி, துணைச்செயலாளர் ராமராஜ், ஒன்றிய பிரதிநிதி சரவணன், தொழில் நுட்ப அணி மணிகண்டன், இந்திரஜித், செல்வராஜ், தங்கராஜ், நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News