உள்ளூர் செய்திகள்

படப்பை அருகே தி.மு.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

Published On 2023-07-21 08:10 GMT   |   Update On 2023-07-21 08:10 GMT
  • திடீரென சக்கர பாணியை வழிமறித்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
  • பலத்த காயம் அடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

படப்பை அருகே உள்ள ஆதனூர் அம்பாள் நகரை சேர்ந்தவர் சக்கரபாணி (41). இவர் ஆதலூர் ஊராட்சியில் தி.மு.க. அவை தலைவராக உள்ளார். மேலும் வீடு கட்டுவதற்கு தேவையான மணல், ஜல்லி போன்றவைகளை விற்பனை செய்யும் தொழிலும், ஜே.சி.பி. எந்திரத்தை வாடகைக்கு விட்டும் வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை அவர் தனது மகனை அருகில் உள்ள பள்ளியில் விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்துகொண்டு இருந்தார். அப்போது மர்ம நபர்கள் திடீரென சக்கர பாணியை வழிமறித்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த சக்கரபாணிக்கு பெருங்களத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News