உள்ளூர் செய்திகள்

தென்காசியில் கருணாநிதி படத்திற்கு தி.மு.க.வினர் மரியாதை

Published On 2023-08-08 14:26 IST   |   Update On 2023-08-08 14:26:00 IST
  • முதல்-அமைச்சர் கருணாநிதி படத்துக்கு தென்காசி நகர தி.மு.க. சார்பில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • நிகழ்ச்சியில் தி.மு.க. தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

தென்காசி:

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்துக்கு தென்காசி நகர தி.மு.க. சார்பில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி நகராட்சி தலைவரும், நகர தி.முக. செயலாளருமான சாதிர் தலைமை தாங்கினார்.

இதில் தென்காசி நகர்மன்ற துணை தலைவர் கே.என்.எல். சுப்பையா, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ஆயான் நடராஜன், தென்காசி நகர தி.மு.க. நிர்வாகிகள் துணை செயலாளர்கள் பால்ராஜ், ராம்துரை பொருளாளர் ஷேக்பரீத், மாவட்ட பிரதிநிதி முகைதீன் பிச்சை, வக்கீல் அணி முருகன் ஜெகதீசன், ராஜா, ரகுமான் சாதத், மாவட்ட பொறியாளர் அணித்தலைவர் தங்கபாண்டியன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அப்துல் ரஹீம், மாவட்ட விவசாய அணி ராஜேந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட ம.தி.மு.க. அவைத் தலைவர் வெங்கடேஸ்வரன் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினார்கள். 

Tags:    

Similar News