உள்ளூர் செய்திகள்

உடன்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய போது எடுத்த படம்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி தி.மு.க. அரசு சாதனை படைக்கிறது- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

Published On 2022-12-18 09:34 GMT   |   Update On 2022-12-18 09:34 GMT
  • தி.மு.க., அறிவித்த பல்வேறு திட்டங்களில் பெரும்பாலானவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார்.
  • தினசரி 20 மணி நேரம் மக்களுக்காக உழைப்பவர் முதல்-அமைச்சர் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.

உடன்குடி:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு பொதுக் கூட்டம் உடன்குடி மெயின்பஜார் அண்ணாதிடலில் நடந்தது. தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா ளருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி, உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, உடன்குடி பஞ்சாயத்து யூனியன் துணைச் சேர்மன் மீராசிராஜூதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவரும், உடன்குடி பேரூர் செயலாள ருமான சந்தையடியூர் மால் ராஜேஷ் வரவேற்று பேசினார். தலைமை கழக பேச்சாளர்கள் கரூர் முரளி, நாகை சாகுல் ஹமீது, முக்காணி கூட்டுறவு சங்க தலைவர் உமரி ஷங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாசலம், துணைச் செயலாளர் ஜெயக்குமார் ரூபன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் நகர் மன்ற துணைத் தலைவர் ரமேஷ், ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், ஆழ்வார் திருநகரியூனியன் சேர்மன் ஜனகர், மாவட்ட பிரதிநிதி சிராஜுதீன், உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், மாவட்ட பிரதிந்திமதன்ராஜ், உடன்குடி பேரூராட்சி கவுன்சிலர் மூஸா மும்தாஜ் பேகம் மற்றும் முகம்மது சலீம் இளைஞர் அணி பாய்ஸ். அஜய் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பேசியதாவது:-

நட்புக்கு இலக்கணமாக இருந்தவர்கள் கலைஞரும், பேராசிரியரும். தேர்தல் வாக்குறுதியாக தி.மு.க., அறிவித்த பல்வேறு திட்டங்களில் பெரும்பாலானவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார். இதனால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி தி.மு.க. அரசு சாதனை படைக்கிறது.

தினசரி 20 மணி நேரம் மக்களுக்காக உழைப்பவர் முதல்-அமைச்சர். தமிழக அரசுஅறிவிக்கின்ற ஒவ்வொரு திட்டங்களும் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் தனிகவனம் செலுத்துகிறார், மக்களைத் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் இப்படி பல்வேறு திட்டங்களை அறிவித்து சாதனை படைத்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் முழு ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முடிவில் உடன்குடி பேரூராட்சி கவுன்சிலர் ஜான் பாஸ்கர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News