கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பேசும் போது எடுத்த படம்.
கலைஞரின் நூற்றாண்டு விழாவினை நடத்த தி.மு.க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
- அரசம்பட்டி தேங்காய் மற்றும் பன்னீர் ரோஜாவிற்கு புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டது.
- கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பங்கேற்று, தீர்மான விளக்கவுரையாற்றினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தேவராஜ் மகால் திருமண மண்டபத்தில், கிழக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடுவது, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை நிலை நிறுத்தி இருக்கும்,
தி.மு.க தலைவரும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி தேர்தல் அறிக்கையில் கொடுக்காத எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி காட்டி திராவிட மாடல் ஆட்சி நாயகன் நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ள இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் சீரிய திட்டம் மற்றும் வேளாண்மை துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளின் வாழ்வாதாரம் முன்னேறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்தும்,
கிருஷ்ணகிரி மாவட்டம், அரசம்பட்டி தேங்காய் மற்றும் பன்னீர் ரோஜாவிற்கு புவிசார் குறியீடு அறிவித்தது, தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை, அமைச்சராக அறிவித்து, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றிக்கு அயராது பாடுபட்ட தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதிஸ்டாலின், அமைச்சர்களுக்கு,
கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமையிலான தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் புதிய உறுப்பினர்களை கழகத்தில் சேர்ப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்கு மாவட்ட அவை த்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலா ளர்கள் கோவிந்தசாமி, சந்திரன், சாவித்திரி கடலரசுமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொருளாளர் கதிரவன் வரவேற்புரையாற்றினார்.
இதில் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பங்கேற்று, தீர்மான விளக்கவுரையாற்றினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் டாக்டர்.விஜய், பர்கூர் தொகுதி பொறுப்பாளர் அரியப்பன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில செயலாளர் செங்குட்டுவன், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சுகவனம், தீர்மானக்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பரிதாநவாப், செந்தில், கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் சித்ரா சந்திரசேகர், அஸ்லாம், நாகராசன், பாலன், கோதண்டன், முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி, அன்பரசன், டாக்டர்.தென்னரசு, கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், தனசேகரன், சுப்பிரமணி, நரசிம்மன், ராஜேந்திரன், செல்வம், சாந்தமூர்த்தி, மகேந்திரன், குமரேசன், ரஜினிசெல்வம், குண.வசந்தரசு, அறிஞர், பேரூர் செயலாளர்கள் பாபு, பாபுசிவக்குமார், தம்பிதுரை, வெங்கட்டப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.