உள்ளூர் செய்திகள்

தெருமுனைப் பிரசார கூட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

கோவில்பட்டியில் தி.மு.க. பிரசார கூட்டம்

Published On 2023-01-10 14:51 IST   |   Update On 2023-01-10 14:51:00 IST
  • தி.மு.க. சார்பில் தெருமுனைப் பிரசார கூட்டம்கடலையூர் சாலையில் நடைபெற்றது.
  • கூட்டத்தில் 22வது வார்டு செயலாளர் அந்தோணி பிரகாஷ் வரவேற்று பேசினார்.

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் நகர தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு தெருமுனைப் பிரசார கூட்டம் 22-வது வார்டு கடலையூர் சாலையில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்றது. நகர் மன்ற தலைவரும், நகர செயலாளருமான, கருணாநிதி தலைமை தாங்கினார். 21வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் உலக ராணி, 22வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஜேஸ்மின் லூர்து மேரி, 23வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சுதா குமாரி, 23வது வார்டு செயலாளர் குமாரசாமி, 24வது வார்டு செயலாளர் அன்பழகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரச்சாரக் கூட்டத்தில் 22வது வார்டு செயலாளர் அந்தோணி பிரகாஷ் வரவேற்புரை வழங்கினார். மாநில கழக கொள்கை பரப்புச் செயலாளர் கரூர். முரளி, தலைமை கழக பேச்சாளர் ஆனந்த், ஆகியோர் சிறப்புரை வழங்கினர். பொதுக்கூட்டத்தில் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் இரா. மணி, நகர அவைத் தலைவர் முனியசாமி, நகர பொருளாளர் ராமமூர்த்தி, நகர துணை செயலாளர்கள் காளியப்பன், அன்பழகன், நகர்மன்ற உறுப்பினர்கள் சண்முகவேல், விஜயன், நகர கழக வார்டு செயலாளர்கள் பூல் பாண்டியன், செந்தில்நாதன், தாமோதரன் 22வது வார்டு துணைச் செயலாளர் ராமர், வார்டு பிரதி நிதிகள் கிருபாகரன், சுமதி, வார்டு அவைத் தலைவர் மிக்கேல், வார்டு பொருளாளர் நாகராஜ், நகர இலக்கிய அணி நிர்வாகிகள் வசந்த், ராஜன், ராஜகோபால், உள்ளிட்ட ஏராளமானோர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News