உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் அருகே தி.மு.க. பாக முகவர்கள் கூட்டம்- ராஜா எம்.எல்.ஏ., பங்கேற்பு

Published On 2023-08-04 14:28 IST   |   Update On 2023-08-04 14:28:00 IST
  • கூட்டத்தில் ராஜா எம்.எல்.ஏ. பேசுகையில, பூத் முகவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.
  • நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சங்கரன்கோவில்:

தென்காசி வடக்கு மாவட்டம் மேலநீலிதநல்லூர் தெற்கு, கிழக்கு, மேற்கு, ஒன்றிய தி.மு.க. சார்பில் குருக்கள்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.

பாக முகவர்கள் கூட்டம்

தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

மேலநீலிதநல்லூர் தெற்கு, கிழக்கு, மேற்கு, ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, வெற்றிவிஜயன், ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசுகையில், பூத் முகவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, மாவட்ட துணை செயலாளர்கள் மனோகரன், புனிதா, ராஜதுரை, பொதுக்குழு உறுப்பினர்கள் மகேஸ்வரி, தேவா என்ற தேவதாஸ், சங்கரன்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் மதி மாரிமுத்து, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் மற்றும் மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் மேலநீலிதநல்லூர் ஒருங்கி ணைந்த ஒன்றிய தி.மு.க. பூத் கமிட்டி உறுப்பினர்கள், அவை தலைவர்கள், ஒன்றிய துணை செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், கிளை செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News