உள்ளூர் செய்திகள்

த.மா.கா. சார்பில் ஆர்ப்பாட்டம்.

மின் கட்டண உயர்வை கண்டித்து மயிலாடுதுறையில் த.மா.கா ஆர்ப்பாட்டம்

Published On 2022-07-26 10:07 GMT   |   Update On 2022-07-26 10:07 GMT
  • குறுவைக்கான பயிர் இன்சூரன்ஸ் அறிவிப்பு செய்வதுடன் கால நீட்டிப்பு செய்து பயிர் காப்பீடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • குறுவை காப்பீடு செய்ய 31ஆம் தேதி உடன் கெடு முடிவடைய உள்ள நிலையில் இதுவரை தமிழக அரசு அறிவிப்புகளையும் வெளியிடவில்லை.

தரங்கம்பாடி:

மின் கட்டணஉயர்வை கண்டித்து மயிலாடுதுறையில் த.மா.கா. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறும்போது:-

மின் கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும். குறுவை காப்பீடு செய்ய 31ஆம் தேதி உடன் கெடு முடிவடைய உள்ள நிலையில் இதுவரை தமிழக அரசு அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. குறுவைக்கான பயிர் இன்சூரன்ஸ் அறிவிப்பு செய்வதுடன் கால நீட்டிப்பு செய்து பயிர் காப்பீடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் சிங்காரவேலன், மாநில இளைஞரணி துணை பொதுச் செயலாளர் கார்த்திக், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன், செம்பை வட்டாரத் தலைவர் சார்லஸ் உள்ளிட்ட ஏராளமான கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News