உள்ளூர் செய்திகள் (District)

புத்தாடைகளை பெற்று உற்சாகத்துடன் திரும்பிய கிராமமக்கள்.

திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் 3700 பேருக்கு தீபாவளி பரிசுகள்

Published On 2023-11-11 08:58 GMT   |   Update On 2023-11-11 08:58 GMT
  • நலிவடைந்த மக்களுக்கு உடைகள் வழங்கப்படுவது வழக்கம்.
  • கிராமங்களில் வசிக்கும் 3700 பேருக்கு உடைகள் வழங்கப்பட்டது.

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்ட த்தில் 14-ம் நூற்றாண்டை சேர்ந்த பழமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனம் உள்ளது.

இந்த ஆதீனத்தின் சார்பில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு ஆதீன கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் நலிவடைந்த மக்களுக்கு உடைகள் வழங்கப்படுவது வழக்கம்.

அவ்வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆதீனத்துக்கு உள்பட்ட திருவாவடுதுறை, திருவாலங்காடு, கரைகண்டம், துகிலி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் நலிவடைந்த 3700 பேருக்கு உடைகள் வழங்கப்பட்டது.

இதனை, திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் வழங்கி தொடக்கி வைத்து அருளாசி கூறினார்.

இதனை தொடர்ந்து ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட கட்டளை தம்பிரான்கள் கோயில் கண்காணிப்பாளர் சண்முகம், பொது மேலாளர் ராஜேந்திரன் மற்றும் ஆதீன நிர்வாகிகள் பொதுமக்களுக்கு வழங்கினர்.

உடைகளை பெற்றுக் கொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து சென்றனர்.

Tags:    

Similar News