உள்ளூர் செய்திகள்

ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள்.

சின்னாளப்பட்டியில் மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி

Published On 2023-10-30 11:24 IST   |   Update On 2023-10-30 11:24:00 IST
  • மாவட்டம் முழுவதிலும் இருந்து 4 வயது முதல் 17 வயது வரை உள்ள 602 மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.
  • பலவகை போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

சின்னாளப்பட்டி:

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு ரோல்பால் ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பில் மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி சின்னாளப்பட்டி பிரிவில் உள்ள ராஜன் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 4 வயது முதல் 17 வயது வரை உள்ள 602 மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். வயது வாரியாக 100 மீட்டர், 300 மீட்டர் என பலவகை போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

ரோல் பால் சங்க திண்டுக்கல் மாவட்ட தலைவர் வாஞ்சிநாதன், மாவட்ட செயலாளரும், சர்வதேச நடுவருமான பிரேம்நாத் ஆகியோர் போட்டி ஏற்பாடுகளை செய்து நடத்தினர்.

Tags:    

Similar News