உள்ளூர் செய்திகள்

மாணவர் சன்எபி, மாணவி தர்ஷினி

மாவட்ட அளவிலான பேச்சு போட்டி: மணப்பாடு பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2022-10-14 09:11 GMT   |   Update On 2022-10-14 09:11 GMT
  • தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை நடத்திய அண்ணா பிறந்த நாள், அண்ணல் காந்தியடிகள் நினைவுநாள் பேச்சுப்போட்டிகள் நடந்தது.
  • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் லெரின்டிரோஸ் பாராட்டினர்

உடன்குடி:

தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை நடத்திய அண்ணா பிறந்த நாள், அண்ணல் காந்தியடிகள் நினைவுநாள் பேச்சுப்போட்டிகள் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பள்ளி, மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். அண்ணா பிறந்தநாள் பேச்சுப்போட்டியில் மணப்பாடு புனித வளன் மேல்நிலைப்பள்ளி மாணவர் சன்எபி முதலிடமும், அண்ணல் காந்தியடிகள் நினைவு போட்டியில் பள்ளி மாணவி தர்ஷினி முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் லெரின்டிரோஸ், தலைமை ஆசிரியர் அருள்பர்னாந்து மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலர்கள் பாராட்டினர். பேச்சுப்போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை ரூ. 5 ஆயிரம் கலெக்டர் வழங்கினார்.

Tags:    

Similar News