உள்ளூர் செய்திகள்

கலை திருவிழாவில் பங்கேற்று நடனமாடிய மாணவிகள்.

மாவட்ட அளவிலான கலை திருவிழா

Published On 2023-10-29 09:48 GMT   |   Update On 2023-10-29 09:48 GMT
  • கலை திருவிழாவில் அனைத்து அரசு பள்ளி, மானவர்கள் கலந்து கொண்டனர்.
  • மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

 தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, காளகஸ்தி நாதபுரத்தில் உள்ள தனியார் கலை. அறிவியல் கல்லூரியில், கடந்த 2 நாட்களாக கலை திருவிழா போட்டி நடந்துவருகிறது. இந்த கலை திருவிழா போட்டியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி, மானவ_மாணவிகள் பங்கேற்று வருகிறார்கள். நேற்று 2-ம் நாள் போட்டியில் 11,12, பல்வேறு பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை காட்டினர். இவர்களின் திறமைகளை நடுவர்கள் அமர்ந்து பார்த்து ஆய்வு செய்து மதிப்பெண் வழங்கி வந்தனர். இந்த கலை திருவிழாவை மாவட்ட கல்வி அதிகாரி அம்பிகாபதி தொடங்கி வைத்தார்.

பின்னர் மானவ மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி பாராட்டினார்.

வெற்றி பெற்ற மாணவ மாணவிகள்மாநில அளவில் நடைபெறும் கலைப் போட்டிகளில்பங்கு பெறுவார்கள் என தெரிவித்தனர்.

இந்த கலை திருவிழாவில், ஏராளமான மானவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை காட்டினர்.

Tags:    

Similar News